இது போயஸ் தோட்டமா?: ராமதாஸ்- இளங்கோவன் தாக்கு
திண்டிவனம்:
முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த விருப்பு, வெறுப்புகளை எல்லாம் போயஸ் தோட்டத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அதை பிரதமர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் காட்டி தமிழகத்தின் பெயரைக் கெடுக்கக்கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், வாஜ்பாயின் விமான நிலைய நிகழ்ச்சியைப் புறக்கணித்தன் மூலம்தமிழகத்துக்கு ஜெயலலிதா கெட்ட பெயர் வாங்கி தந்துவிட்டார். பா.ம.க. அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் முயற்சியால்கிடைக்கும் ரயில் திட்ட நிகழ்ச்சிகளில் கூட அதிமுக அமைச்சர்கள் பங்கேற்பது இல்லை.
தமிழகத்தில் மட்டும் தான் இப்படி எதில் பார்த்தாலும் அரசியல் செய்யும் அசிங்கம் நடக்கிறது என்றார்.
இளங்கோவன் தாக்கு:
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம்பேசுகையில்,
பிரதமர் கலந்து கொண்ட விமான நிலைய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததன் மூலம் தமிழகத்திற்குபெரும் அவமதிப்பை ஏற்படுத்தி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. பிரதமரையும் அவர்அவமானப்படுத்தி விட்டார். ஜெயலலிதாவின் அகம்பாவம் எல்லை மீறுகிறது.
அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைப்பதன் மூலம்தான்மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
அது நடந்தாலுந் நடக்காவிட்டாலும் டான்சி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்து. தீர்ப்பு வந்தபிறகு அதிமுக சுக்கு நூறாக உடைந்து சிதறி விடும். அதில் ஜெயலலிதா காணாமல் போவார் என்றார்இளங்கோவன்.