பசுக்களில் எந்திரங்கள் மூலம் பால் கறக்க ஜெயலலிதா எதிர்ப்பு
சென்னை:
மாடுகளின் "மடியில்" இயந்திரத்தைப் பொருத்தி பால் கறப்பது மிகவும் கொடூரமானது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில், கைகளால் பால் கறப்பதற்குப் பதில்,வெளிநாடுகளில் உள்ளது போல, பசு மாடுகளின் மடிகளில் இயந்திரத்தைப் பொருத்தி பால் கறக்கலாம் என்ற திட்டத்தை அதிகாரிகள்என்னிடம் கூறினர்.
இதைக் கேட்டவுடன், திட்டத்தை நான் நிராகரித்து விட்டேன். காரணம், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இயந்திரம் பொருத்தப்பட்டுஇருந்தால், மடிகளில் ரத்தம் வெளியாகத் தொடங்கி விடும். இது மிகவும் கொடூரமானது என்றார் அவர்.
விலங்குகளின்பால் ஜெயலலிதாவுக்கு சமீபத்தில் அதிக அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட யானை ஒன்றை மீட்க அவர் உத்தரவிட்டார். அதேபோல, இறைச்சிக்காக வெட்டப்பட லாரிகள்,வேன்களில் கொண்டு செல்லப்படும் மாடுகளை மீட்டு அருகில் உள்ள மாடுகள் பாதுகாப்பு கொட்டடிகளில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பால் கறக்கும் எந்திரங்களுக்குத் தடை விதித்து பசு மாடுகளை காப்பாற்றியுள்ளார் ஜெயலலிதா.
சங் பரிவார்களின் நெருக்குதலால் பசு வதைத் தடுப்புச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வர உள்ள நிலையில் அதிமுகவும் அதற்குஆதரவு தெரிவித்துள்ளது.