அஸ்ட்ரா ஏவுகணை: இந்தியா இன்று மீண்டும் சோதனை
பாலாசூர்:
இந்தியாவே தயாரித்துள்ள விமானத்தில் இருந்து விமானத்தைத் தாக்க செலுத்தப்படும் அஸ்ட்ரா ஏவுகணை மீண்டும் இன்றுவெற்றிகரமாக சோதனையிடப்பட்டது.
கடந்த 9ம் தேதி தான் முதல்முறையாக இந்த ஏவுகணை சோதனையிடப்பட்டது. ஒரிஸ்ஸாவின் சந்திபூர் ஏவுகணைத் தளத்தில்இந்தச் சோதனை நடந்தது. இப்போது மீண்டும் அதே இடத்தில் இச் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.
3.8 மீட்டர் நீளமும் 10 இன்ச் மட்டுமே சுற்றளவும் கொண்ட இந்த ஏவுகணை காலை 10.58 மணுக்கு சோதனையிடப்பட்டுள்ளது.
25 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை எதிரி விமானத்தையும் ஹெலிகாப்டரையும் விரட்டிச் சென்று தாக்கும் திறன் கொண்டது இந்தஏவுகணை.
இந்தியா தயாரித்துள்ள லைட் காம்பேட் ஏர்கிராப்ட் (எல்.சி.ஏ.) போர் விமானத்தில் இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும் என்றுதெரிகிறது.
திட எரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணை seek and destroy தொழில்நுட்பம் கொண்டது.
-->












Click it and Unblock the Notifications