கிரிக்கெட்டுக்காக ஆடுகளை கொன்றவர் படுகொலை
சென்னை:
கிரிக்கெட் விளையாட்டுக்கு இடையூறாக மைதானத்தில் மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகளை வாலிபர்கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்றார். இதையடுத்து அவரை, ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் வெட்டிப்படுகொலை செய்தனர்.
சென்னை மைலாப்பூர் லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கிரிக்கெட் வீரர். இப்பகுதியில் உள்ளமாநகராட்சிக்குச் சொந்தமான மைதானத்தில் அடிக்கடி லோக்கல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும். இந்தப்போட்டிக்கான ஆடுகளத்தை (பிட்ச்) தயாரிப்பது பாலாஜியின் வேலை.
அதுபோல பிட்ச் தயாரித்துவிட்டு அதை யாரும் சிதைத்துவிடாமல் கண்காணித்து வந்தார் பாலாஜி. அப்போது சிலஆடுகள் மைதானத்தில் ஊடுருவி மேய்ந்தன.
இதையடுத்து வெறி கொண்ட பாலாஜி உருட்டுக் கட்டையால் அந்த ஆடுகளை அடித்தார். இதில் நான்கு ஆடுகள்அந்த இடத்திலேயே மண்டை உடைந்து இறந்தன. இதையடுத்து பாலாஜி தப்பியோடிவிட்டார்.
இதைக் கேள்விப்பட்ட ஆடுகளுக்குச் சொந்தக்காரர்களான ராஜேஸ்வரி, அவரது சகோதரர்முனுசாமி, தீபக் மற்றும்இன்னொருவர் என நான்கு பேரும் அங்கு வந்தனர். இறந்து கிடந்த ஆடுகளைப் பார்த்தும் கொலை வெறி ஏறியது.
இதையடுத்து இந்த நால்வரும் சேர்ந்து பாலாஜியை தேடிப் பிடித்து அடித்து, உதைத்தனர். அவர்களிடமிருந்து தப்பபாலாஜி ஓடியுள்ளார். விடாமல் துரத்திய 4 பேரும், பாலாஜியை அரிவாள் மற்றும் கத்திகளால் வெட்டினர்.ராஜேஸ்வரியும் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் பாலாஜி நடு ரோட்டில் துடிதுடித்து இறந்தார்.
இந்தக் கொலை மைலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications