விமானத்தில் பறந்தபோது மாரடைப்பு: நடுவானில் உயிர் நீத்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் இருந்து கொச்சி சென்ற விமானத்தில் பயணம் செய்த 72 வயது பெண் நடுவானில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விமலா நாயர். இவர் தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாரத் பூஷனின் மாமியார் ஆவார்.தனது மகளுடன் விமலா நாயர் நேற்றிரவு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கொச்சின் சென்று கொண்டிருந்தார்.

இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. விமானம் கிளம்பியவுடன் அவருக்கு தீவிரமான முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்துவிமானத்தில் இருந்த ஒரு டாக்டர் அவருக்கு உதவ முன் வந்தார். அப்போது விமலாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

டாக்டர் எவ்வளவோ முயன்றும் கூட அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர் நடு வானிலேயே மரணமடைந்தார்.

இது குறித்து கொச்சி விமான நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. விமானம் தரையிறங்கியுடன் விமான நிலைய மருத்துவ அதிகாரிஅரவிந்தாக்ஷன் விமலாவின் உடலில் சோதனை நடத்தினார். அவர் மாரடைப்பால் உயிரிழந்தாக டாக்டர் உறுதி செய்தார். இதன் பின்னர்உடல் அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+