கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
திருச்சி:
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது தம்பி ராமஜெயத்தின் வீட்டிலும், தொழிற்சாலைகளிலும் லஞ்ச ஒழிப்புப்போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
நேருவின் தம்பி ராமஜெயம் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக புகார் உள்ளது.
இந்த புகார் தொடர்பாக ஏற்கனவே நேருவின் வீட்டிலும் தம்பியின் வீடுகளிலம் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந் நிலையில்தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக சோதனை நடத்தபபட்டது.
திருச்சி அருகே உள்ள இலங்காபுத்தூர் பகுதியில் உள்ள ராமஜெயத்திறக்குச் சொந்தமான கிரானைட் நிறுவனம், மினரல் வாட்டர் தயாக்கும்நிறுவனம் ஆகிவற்றில் இந்தச் சோதனைகள் நடந்தன.
இவை கே.என். நேருவின் பினாமி சொத்துக்கள் என போலீசார் கருதுகின்றனர். ஆனால், தங்களுக்கு மஞ்சள் மண்டியும் ஏராளமானவிவசாய நிலமும் இருப்பதாகவும் அதன் மூலம் தான் சொத்துக்கள் சேர்ந்ததாகவும் நேரு கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications