For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகிச்சை கிடைக்காமல் தாய், குழந்தை சாவு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்கள் வராததால் பிறந்த குழந்தையும் அதைஈன்ற தாயும் இறந்தனர். மேகலா (வயது 20) என்ற அந்தப் பெண் துறையூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அவருக்கு முறையான சிகிச்சை இன்றி நடந்த பிரசவத்தால் குழந்தை இறந்தது.

தொடர்ந்து இன்று மேகலாவின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில்இருந்ததால் திருச்சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டார். ஆனால், அங்கு வழியிலேயேஅவர் இறந்தார்.

அரக்கோணத்தில் தெருவில் கிடந்த சிசுக்கள்...

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நேற்று மட்டும் மொத்தம் 8 அறுவைச்சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் இந்த அரசு மருத்துவமனைக்கு அடுத்த தெருவில் பிறந்த சில மணி நேரங்களே ஆகியிருந்த 2 சிசுக்களின்பிணங்கள் கிடந்தன.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் இல்லாத காரணத்தால், சரியான முறையில் பிரசவம்பார்க்காததால் இந்த சிசுக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இவற்றை மருத்துவமனை ஊழியர்கள் அல்லது சிசுக்களின் பெற்றோரே தெருவில் வீசியிருக்கலாம் என்றுகருதப்படுகிறது. இச் சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X