For Daily Alerts
Just In
10 எம்.எல்.ஏ தொகுதிகளில் தொடர் பந்த்: விவசாயிகள் அறிவிப்பு
ஈரோடு:
கீழ் பவானி பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட அரசு தவறினால், பாசனப் பகுதியில் உள்ள 10 சட்டசபைத்தொகுதிகளிலும் தொடர் பந்த் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
கீழ் பவானி பாசனப் பகுதி விவசாயிகள் சங்கத்தின் மாநாடு ஈரோட்டில் நடந்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் நல்லசாமி, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும், கீழ்பவானி பாசனப் பகுதியில், தவறான நீர் நிர்வாகத்தை அரசு கடைப்பிடித்தால், பாசனப் பகுதியில் உள்ள 10சட்டசபைத் தொகுதிகளிலும் தொடர் பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம்.
பனை மர விவசாயிகளின் வாழ்வைக் கருத்தில் கொண்டு கள் இறக்குவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் ஈரோடு வந்தனர்.
Comments
Story first published: Wednesday, May 14, 2003, 5:30 [IST]