வன்முறையை தூண்ட படம் எடுக்கவில்லை: கிருஷ்ணசாமிக்கு கமல் பதில்
சென்னை:
வன்முறையைத் தூண்டுவதற்காக சண்டியர் படத்தை எடுக்கவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர டாக்டர்கிருஷ்ணசாமிக்கு நடிகர் கமல் பதிலளித்துள்ளார்.
சண்டியர் படம் தேவர் மகன் பாகம் 2 என்று குற்றம்சாட்டிய கிருஷ்ணசாமி, இதனால் தேவர்- தலித் மோதல் தான்ஏற்படும். இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தலித்கள் எதிர்ப்பார்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு கமல் அளித்துள்ள பதில்:
நான் அமர் என்றும் அக்பர் என்றும் ஆண்டனி என்றும் தனித்தனியாக படம் எடுக்க மாட்டேன். அமர் அக்பர்ஆண்டனி என்று ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் தான் படம் எடுப்பேன். எல்லோரும் வந்து பார்க்கவேண்டும் என்பதற்காகத் தான் படம் எடுக்கிறோம். வன்முறையையோ, ஜாதிக் கலவரத்தையோ தூண்ட அல்ல.
சண்டியர் படத்தின் கதை என்ன என்று தெரியாமலோய யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது. வன்முறைையத்தூண்ட நான் படம் எடுக்க மாட்டேன். வன்முறை கூடாது என்று தான் படம் எடுக்கிறேன். இதை டாக்டர்கிருஷ்ணசாமி புரிந்து கொண்டால் சரி.
எனக்கு எந்த அளவுக்கு அரசியல் தெரியுமோ அந்த அளவுக்குத் தான் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்குசினிமாவைப் பற்றித் தெரிந்திருக்கும். இதனால் நான் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றார் கமல்.












Click it and Unblock the Notifications