பொல்லாதவர்கள் கையில் சிக்கி விட்டது பொடா: கருணாநிதி வருத்தம்
சென்னை:
பொடா சட்டம் பொல்லாதவர்களின் கையில் சிக்கி விட்டது. எனவே அந்த சட்டத்தை திரும்பப் பெறுவதைத் தவிரவேறு வழியில்லை என்று திக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் பத்திரிக்கை சுதந்திர பாதுகாப்பு குழு என்ற அமைப்பின் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது.இதில், திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுஉள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரன்ட்லைன் ஆசிரியரும் இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான என். ராம் தலைமை வகித்தார்.கருணாநிதி பேசுகையில், பொடா சட்டத்திற்கு ஆதரவாக திமுக வாக்களித்தபோது, நான் கொடுத்தஉறுதிமொழியை இப்போது வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். ஏனென்றால், பொடா சட்டம் இப்போதுபொல்லாதவர்களின் கையில், தகாதவர்களின் கையில் சிக்கி விட்டது. எனவே இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதைத்தவிர வேறு வழியில்லை.பத்திரிக்கை சுதந்திர பாதுகாப்பு என்று பெயர் போட்டுள்ளார்கள். அதில் பத்திரிக்கை என்ற வார்த்தையை எடுத்துவிட வேண்டும். ஏனென்றால் இப்போது, தமிழகத்தில் சுதந்திரத்தையே பாதுகாக்க வேண்டிய அவல நிலைஏற்பட்டுள்ளது.
பத்திரிக்கைகள் மீது தொடர்ந்து அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன. பத்திரிக்கைச் சுதந்திரம் நசுக்கப்பட்டுவருகிறது. இவற்றிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இங்கு குரல் கொடுத்திருக்கின்றன என்றார்அவர்.
டாக்டர் ராமதாஸ் பேசுகையில், பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பாதுகாக்க எங்கு வேண்டுமானாலும், எப்போதுவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் குரல்கொடுக்க, போராட நானும், பாமகவும் தயாராகஇருக்கிறோம்.
அரசியல்வாதிகளின் கடமையை உணர்த்தும் பொறுப்பில் பத்திரிக்கைகள் உள்ளன. அப்படிப்பட்டபத்திரிகைகளுக்கு எதிராக பொடா சட்டம் பயன்படுத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன் என்றார்.
இளங்கோவன் பேசுகையில், பத்திரிக்கைளில் அவதூறாக எழுதினார்கள் என்று கைது செய்கிற இவர்களைஇனியும் விட்டு வைத்தால், பத்திரிக்கைகளை நடத்தினாலே கைது செய்வார்கள் என்றார்.