தனியே இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து பயங்கரமாக கொலை செய்யப்பட்டார்.
கடலூர், மஞ்சக் குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் ராணி. இவரது கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். மகன்,மகளுடன் இங்கு வசித்து வந்தார். கோடை விடுமுறை காரணமாக தனது மகனையும், மகளையும் கேரள மாநிலம்கொல்லத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந் நிலையில் அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, சில மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ராணியை கழுத்தைஅறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட ராணி அப் பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனவே,வட்டிக்குப் பணம் வாங்கிய யாராவது சிலர் அவருடன் ஏற்பட்ட தகராறால் கொலை செய்திருக்கலாம் என்றுபோலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications