விசாவுக்காக போலி ஆவணம்: ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் கைது
சென்னை:
அமெரிக்கா செல்ல விசா பெறுவதற்காக, போலியான சான்றிதழ்களைக் கொடுத்த ஆந்திர மாநிலகிரிக்கெட் வீரர் கரிம்கமாலி பாய் சம்னானி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர விரும்பிய சம்னானி, அங்குசெல்வதற்கு விசா பெற சென்னையில் உள்ள அமெரிக்க தூதகரத்தில் விண்ணப்பித்திருந்தார்.அவரது சான்றிதழ்களை சரி பார்த்த அதிகாரிகள், சான்றிதழ்கள் போலியானவை என்றுகண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்னானிகைது செய்யப்பட்டர்.
கைது செய்யப்பட்ட சம்னானி ஆந்திர மாநில கிரிக்கெட் அணியில் விளையாடியவர். சமீபத்தில் 2முறை இந்த அணியின் சார்பில் இங்கிலாந்துக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளில்பங்கேற்றுள்ளார்.
இன்னொருவர் கைது:
இதேபோல, போலி ஆவணம் கொடுத்து விசா பெற முயன்ற விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தஅன்சருதீன் முகம்மது என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.