தா.கி.படுகொலை: 10 கூலிப் படையினர் கைது
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக 10 கூலிப் படையினரைபோலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
தா.கிருட்டிணன், மதுரையில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த 20ம் தேதி காலை படுகொலைசெய்யப்பட்டார். அவரைக் கொன்றது 4 பேர் கொண்டகும்பல் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அக்கும்பலைப் பிடிக்க போலீஸார் 6 தனிப் படைகளை அமைத்து தேடுதல்வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில், தேனி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்குச் சென்ற இந்தப் படையினர் அங்குகூலிப் படையினரைச் சேர்ந்த 10 பேரைப் பிடித்துள்ளனர்.
அவர்களை மதுரைக்குக் கொண்டு வந்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று போலீஸார் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் முக.க. அழகிரிக்கு ஆதரவான மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் 6 பேரும் தல்லாகுளம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications