ஜூன் 1 முதல் மீண்டும் அரிசிக் கூப்பன் வினியோகம்
சென்னை:
கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் ரேஷன் கடைகளில் அரிசி பெறுவதற்கான கூப்பன்புத்தகம் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது.
போலி ரேஷன் கார்டுகளைத் தவிர்ப்பதற்கும், அரிசி வினியோகத்தை முறைப்படுத்தவும் ஒருஆண்டிற்கான அரிசிக்கான கூப்பனை மொத்தமாக ன் கூட்டியே மக்களுக்கு வழங்கும் திட்டத்தைகடந்த ஆண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி குடும்பத் தலைவர் நேரில் வந்து அரிசிக் கூப்பனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.அந்தக் கூப்பனைக் கொடுத்தால்தான் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்படும்.
கடந்த ஆண்டு அறிமுகமான இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால்,இந்த ஆண்டும் இத் திட்டத்தைத் தொடர அரசு முடிவு செய்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் கூப்பன்கள்வினியோகிக்கப்படவுள்ளன.
இந்த முறை 2 கிலோ மற்றும் 5 கிலோ அரிசி என இரண்டு வகையான கூப்பன்கள் கொடுக்கப்படும்.இதில் எது தேவையோ அந்தக் கூப்பனை மட்டும் காட்டி அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம்.
மொத்தமாக 5 கிலோ அரிசி வாங்க வசதியில்லாதவர்கள் இனி சிரமப்படாமல் 2 கிலோ மட்டும்வாங்கிக் கொள்ள முடியும்.
இற்போது கிலோ அரிசி ரூ. 3.50க்கு (10 கிலோ வரை ) விற்கப்படுகிறது. அதற்கு மேல் வாங்கும்அரிசிக்கு முதல் பத்து கிலோ ரூ. 6 க்கு விற்கப்படுகிறது. அதிகபட்சம் 20 கிலோ அரிசி வரை வாங்கமுடியும்.