For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் தீவிரவாதிகளின் சென்னை தொடர்புகள்: ஐ.பி விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காஷ்மீர் தீவிரவாதிககளுக்கு சென்னையில் சில நபர்களுடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஜம்மூ- காஷ்மீரின் காட்டுப் பகுதிகளில் சோதனை நடத்தி வரும் ராணுவப் படையினர் இதனைத்தெரிவித்துள்ளனர். காட்டுப் பகுதிகளில் தீவிரவாதிகளின் முகாம்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றியபோது சிலசாட்டிலைட் போன்களும் பிடிபட்டன.

அவற்றை ராணுவ வீரர்கள் சோதனையிட்டபோது அந்த சாட்டிலைட் போன்களில் இருந்து சென்னைக்கும் பலமுறைபேசப்பட்டுள்ள விவரம் தெரியவந்தது. இதையடுத்து ராணுவ உளவுப் பிரிவினர் மத்திய உளவுப் பிரிவினருக்கு(இன்டெலிஜன்ல் பீரோ- ஐபி) தகவல் தந்தனர்.

தீவிரவாதிகள் தொடர்பு கொண்ட அந்த சென்னை தொலைபேசி நம்பர்களைக் கண்டறியும் முயற்சியிஸ் இப்போதுமத்திய உளவுப் பிரிவினர் மாநில உளவுப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

காஷமீரின் சுரான்கோட் பகுதியில் தேர் பீர் பஞ்சால் காட்டுப் பகுதியில் ராணுவத்தினர் அதிரடி ஆபரேசன்நடத்தியபோது இந்த சாட்டிலைட் போன்கள் பிடிபட்டன. சென்னை தவிர வட கிழக்கு மாநிலங்கள், ஹைதராபாத்,பாட்னா, ராஞ்சி ஆகிய இடங்களுக்கும் இதன் மூலம் தீவிரவாதிகள் பேசியுள்ளனர்.

இதையடுத்து அந்த மாநில போலீசாரையும் ராணுவம் தொடர்பு கொண்டுள்ளது.

ஆனால், சென்னையில் யாரையும் தீவிரவாதிகள் தொடர்பு கொள்ளவில்லை என காவலதுறை ஆணையர்விஜய்குமார் மறுத்துள்ளார். இது தொடர்பாக காஷ்மீரில் உள்ள ராணுவ உளவுப் பிரிவினருடன் பேசிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், சென்னையில் இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X