சாலையில் கிடந்த ரூ. 5 லட்சம்: பணம் யாருடையது?
கோவை:
கோவையில், சாலையில் கிடந்த ரூ. 5 லட்சம் பணம் தங்களுடையது என்று இரண்டு பேர்கூறியுள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை வடக்கு தாசில்தார் விசாரணைநடத்தி வருகிறார்.
கோவை காளியம்மன் கோவில் சாலையில், பிளாட்பாரத்தின் அருகே ஒரு பை கிடந்தது. அதைஎடுத்த மகேந்திரன் என்பவர் அதில் ரூ. 4.72 லட்சம் பணம் இருந்ததைப் பார்த்தார். உடனடியாகஅதை தனது பெற்றோரிடம் கொடுத்தார்.
அவர்கள் காட்டூர் காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்தனர். இந்தப் பணம் யாருடையது என்றுபோலீசார் விசாரித்தனர்.
அப்போது நஞ்சப்பா சாலையில் கடை வைத்திருக்கும் ஒருவர், காவல் நிலையத்திற்கு வந்து பணம்தன்னுடையது என்றார். அதே சமயத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும் பணம் தன்னுடையதுஎன்று கூறி அணுகியுள்ளார்.
இதனால் காவல் துறையினர் குழம்பினர். இதையடுத்து பணம் யாருடையது என்பது குறித்துவிசாரிக்க வடக்கு தாசில்தாருக்கு போலீசார் கோரிக்கை விடுத்தனர். அவர் விசாரணையைத்தொடக்கியுள்ளார்.