அதிமுக எம்எல்ஏ வீட்டின் மீது பயங்கர தாக்குதல்
அவினாசி:
கோவை மாவட்டம் அவினாசியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ வீடு சூறையாடப்பட்டது.இதையடுத்து அப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அவினாசி ரிசர்வ் சட்டசபைத் தொகுதி அதிமுக உறுப்பினராக இருப்பவர் மகாலிங்கம். இவரதுவீட்டின் மீது நேற்றிரவில் பயங்கரத் தாக்குதல் நடந்தது. 3 கார்களில் வந்த 20 பேர் வீட்டை அடித்துநொறுக்கினர். கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.
வீட்டுக்குள் நுழைந்த அக் கும்பல் பொருட்களையும் சூறையாடியது. காரும் உடைத்துநொறுக்கப்பட்டது. இதையடுத்து அப் பகுதி மக்கள் ஓடி வந்தனர். உடனே அக் கும்பல்தப்பியோடிவிட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் அவினாசியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. கடைகள்அனைத்தும் மூடப்பட்டன. இந்தத் தாக்குதல் தொடர்பாக தலித் விடுதலை அமைப்பைச் சேர்ந்தசெங்கோட்டையன் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அரசியல்ரீதியில் செங்கோட்டையனுக்கும் மகாலிங்கத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.இதனால் தன் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications