For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராட்டின விபத்து: பலி 11 ஆக உயர்வு- 2 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

கரூரில் கோவில் திருவிழாவில் ராட்சத ராட்டினம் சரிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை11 ஆக உயர்ந்துவிட்டது.

திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட இந்த ராட்டினம் கரூரில் வீசிய சூறாவளிக் காற்றில் குடைசாயந்தது. ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்தவர்களும் கீழே இருந்தவர்களுமாக 3 பேர் அதேஇடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவரும் பலியாகிவிட்டார். இதனால் சாவுஎண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 11 ஆகிவிட்டது.

இதையடுத்து ராட்டினத்தை லீசுக்கு எடுத்து நடத்திய தனபால் மற்றும் ராட்டினத்தை இயக்கியலாக்டோ ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் லாக்டோ என்பவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.

இந்த ராட்டினத்தை கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரவி மற்றும் கணேசன் ஆகியோர்டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாடகைக்கு எடுத்து வந்துள்ளனப். பின்னர் அதைதனபாலுக்கு லீசுக்குக் கொடுத்துள்ளனர்,

பாதுகாப்பான வகையில் ராட்டினத்தை தரையில் நிறுவாத காரணத்தால்தான் அது குடை சாய்ந்துஇத்தனை பேரை பலிவாங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்குமுதல்வர் ஜெயலலிதா ரூ. 50,000 நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X