For Daily Alerts
Just In
பிறந்த இரண்டே நாளில் கோவில் வாசலில் அனாதையாய் விடப்பட்ட சிசு!
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக்கன்னியம்மன் கோவில் வாசலில் பிறந்து 2 நாளே ஆனபெண் குழந்தை அநாதையாக விடப்பட்டிருந்தது.
நேற்று காலை 7 மணியளவில் ஒரு பெண் சிசு கோவில் வாசலில் கிடந்தது. இதைப் பார்த்துஅதிரிச்சியடைந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் உடனே அக் குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.
அந்த பெண் குழந்தை பிறந்து 2 நாட்களே ஆனதாகும். துணியில் சுற்றப்பட்டிருந்த அந்தக்குழந்தையை போலீஸார் உதவும் கரங்கள் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலமாகவே பிறந்த குழந்தைகளை கைவிடுவது அதிகரித்து வருகிறது.
Comments
Story first published: Saturday, May 31, 2003, 5:30 [IST]