For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளு குளுவானது சென்னை!!!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் வெப்ப நிலை தலைகீழாக மாறியது. அனல் காற்று வீசிய சென்னை நகரில் நேற்று முதல் குளுகுளு காற்றும், மேக மூட்டமும் நிலவி வருகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் இதே போல வெப்பம்தணிந்தது.

சென்னை நகரில் கத்திரி வெயில் முந்த பிறகும் உச்சகட்ட வெப்பம் காணப்பட்டது. கடந்த 90 ஆண்டுகளாகஇல்லாத அளவுக்கு வெப்ப நிலை பதிவாகியிருந்தது. அனல் காற்றும் சேர்ந்து கொண்டதால், சென்னை மக்கள்கொளுத்தும் வெயிலில் தவித்து வந்தனர்.

இந் நிலையில் நேற்று நிலைமை தலைகீழாக மாறியது. வெயில் போன இடமே தெரியவில்லை. ஒரே நாளில்வெப்ப நிலை சுமார் 4 டிகிரி அளவுக்குக் குறைந்துவிட்டது.

நகரை மேகங்கள் மூடியிருந்தன. கடற் காற்றும் பலமாகவே வீசியதால் ஊரே ஊட்டி போல மாறியது.சிலஇடங்களில் லேசான தூறலும் காணப்பட்டதால் வெயில் கொடுமையிலிருந்து தற்காலிகமாக தப்பினர் சென்னைமக்கள்.

நேற்றைய வெப்ப நிலை 40 டிகிரியாக இருந்தது. ஒரே நாளில் 4 டிகிரி அளவுக்கு வெப்பநிலை குறைந்துவிட்டது.இன்றும் காலையிலும் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் வெப்ப நிலை கொஞ்சம் குறைவாகவே இருந்தது.ஆனால், நேரம் செல்லச் செல்ல நேற்றை விட ஓரளவு வெயில் அதிகமாக இருந்தது. ஆனால், இரு தினங்களுக்குமுன்பு வரை இருந்தது மாதிரி கொடுமை இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X