செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
தமிழ் சினிமா துணை நடிகைகள், டிவி நடிகைகள், நர்ஸ்களின் செக்ஸ் படங்களை இன்டர்நெட்டில்போட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கைதான டாக்டர் பிரகாஷின் வழக்கை இன்னும் 8 வாரத்தில் முடிக்கசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் நடிகைகள், தனது மருத்துவமனையில் பணியாற்றியநர்ஸ்கள் மற்றும் கல்லூரி, குடும்பப் பெண்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ படம் எடுத்துஅதை இன்டர்நெட்டில் விற்று வந்தார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
தகவல் தொழில்நுட்ப முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழும், குண்டர் சட்டத்தின் கீழும் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையின்போது ஏராளமான பெண்களை வைத்துஆபாசப் படம் எடுத்து விற்று வந்தது தெரியவந்தது.
சென்னை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில், கடந்த 17மாதங்களாக எந்தவித விசாரணையும் இல்லாமல் நான் சிறையில் உள்ளேன்.
என் மீதான வழக்கில் 2002ம் ஆண்டு மார்ச் 20ம் தேதியே குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டு விட்டது. எனவே என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த விடுறை கால உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ராமமூர்த்தி, இன்னும் 8வாரத்திற்குள் பிரகாஷ் தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று காவல்துறைக்குஉத்தரவிட்டார்.
அதே நேரத்தில் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டர்.












Click it and Unblock the Notifications