ஆசிரியருடன் ஓடிப் போய் திருமணம் செய்த மாணவி: இருவரும் விஷம் குடித்தனர்
வாழப்பாடி:
16 வயது மாணவியும் அவரது வகுப்பின் ஆசிரியரும் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஊரார்கொன்று விடுவார்கள் என்று அஞ்சிய இருவரும் விஷம் குடித்துள்ளனர். இப்போது மருத்துவமனையில்உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இவரது வகுப்பில் படித்து வந்தவர் வாசுகி (வயது 16). இருவருக்கும் காதல் அரும்பியுள்ளது. இந் நிலையில் இருநாட்களுக்கு முன் வாசுகியைக் காணவில்லை. அவரை பெற்றோர் தேடிக் கொண்டிருந்தபோதே ஆசிரியர்செல்வராஜையும் காணவில்லை என்ற புகார் வந்தது.
இதையடுத்து பள்ளி மாணவர்களிடம் விசாரித்தபோது தான் இருவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.இருவரும் ஊரைவிட்டு ஓடிப் போனதும் தெரியவந்தது. இதையடுத்து மைனரான (16 வயது தான் ஆவதால்)தங்களது மகளை ஆசிரியர் கடத்திச் சென்றுவிட்டதாக வாசுகியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தந்தனர்.
இருவரையும் போலீசாரும் ஊராரும் தேடிக் கொண்டிருந்தபோது இருவரும் சேலம் மருத்துவனையில் உயிருக்குப்போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஊரார்தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்ற பயமே இந்த இருவகுக்கும் வந்துள்ளது.
இதையடுத்து விஷம் குடித்துள்ளனர். வாசுகி மயங்கி விழுந்ததைக் காண சகிக்காத செல்வராஜ் அவரையும் தூக்கிக்கொண்டு சேலம் மருத்துவமனைக்கு ஓடி வந்தார். பின்னர் தானும் மயங்கி விழுந்தார்.
இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications