விசாரணைக் கைதி சாவு: சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

தேனி:

போலீஸ் காவலில் இருந்த கைதியின் சாவுக்குக் காரணமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு பெரியகுளம் விரைவுநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கடந்த1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி,போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்ஆகியோரால் கைது செய்யப்பட்டார்,

பின்னர் தேனிக்குக் கொண்டு செல்லப்பட்ட பாண்டியன் அங்கு காவல் நிலையத்தில் வைத்து போலீஸாரால்துன்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

பின்னர் கொடைக்கானல் மற்றும் திருச்சிக்கும் அவர் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். திருச்சியில்போலீஸ் காவலில் இருந்தபோது பாண்டியன் மர்மமான முறையில் இறந்தார்.

இதுதொடர்பாக உறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பாண்டியனின் சாவில் மர்மம் இருப்பதாகஅவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து பெரியகுளம் உதவி ஆட்சியர் குமார் ஜெயந்த், விசாரணை நடத்தி அறிக்கையை பெரியகுளம்விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கும் பதிவு செய்தார்.

இரண்டு காவல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக பெரியகுளம்விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். விசாரணை முடிவில்,சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தேவகி தீர்ப்பளித்தார். இன்ஸ்பெக்டரும்இவரும் சேர்ந்து பாண்டியனை அடித்துக் கொன்றதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+