இன்று வீர வாஞ்சிநாதனின் நினைவு தினம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
வீர வாஞ்சி நாதனின் 92-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் தமிழன் வாஞ்சிநாதன் ஆவார்.
1911ம் ஆண்டு இதே நாளில்தான் மணியாச்சி ரயில் நிலையத்தில், ரயிலில் பயணம் செய்த ஆஷ்துரை என்ற ஆங்கில கலெக்டரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலைசெய்துஅழியாப் புகழ் பெற்றார்.
வாஞ்சிநாதனின் நினைவு தினத்தையொட்டி அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம்செங்கோட்டையில் இன்று காலை 10.50 மணிக்கு நினைலுச் சங்கொலி எழுப்பப்பட்டது.
இதையடுத்து 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் வாஞ்சிநாதன் சிலைக்குபலரும் மாலை அணிவித்தனர்.
-->











Click it and Unblock the Notifications