For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரிக்கு ஆதரவாய் நடந்ததாக உதவி கமிஷ்னர் அதிரடி சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

அழகிரியிடம் அடாவடியாக நடந்து கொள்ள மறுத்த மதுரை உதவி போலீஸ் கமிஷ்னர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்..

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரி காவல்நீட்டிப்புக்காக இன்று மதுரை கொண்டு வரப்பட்டார். மதுரை ஆறாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வனிதா முன்அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அழகிரியின் காவலை வரும் ஜூலை 2ம் தேதி வரை 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அழகிரி திரும்பவும் திருச்சி சிறைக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டார்.

Alagiri

திருச்சியில் இருந்து வேன் மூலம் மதுரை
நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட அழகிரி

முன்னதாக அழகிரி திருச்சியில் இருந்து மதுரைக்குக் கொண்டு வரும் பொறுப்பை மதுரை சட்டம்-ஒழுங்குப் பிரிவுஉதவி கமிஷனர் ஹரிஹரன் ஏற்றிருந்தார். திருச்சியில் இருந்து அழகிரி போலீஸ் வேனில் அழைத்து வரப்பட்டார்.அப்போது அழகிரியின் வழக்கறிஞர் மோகன் குமாரும் வேனில் ஏறிக் கொண்டார். இதை ஹரிஹரன்தடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து அழகிரியும் மோகன்குமாரும் திருச்சியில் இருந்து மதுரை வரை ஆலோசித்துக் கொண்டே வந்தனர்.

இந்தத் தகவல் உடனடியாக மதுரை கமிஷ்னர் விஜய்குமாருக்குத் தெரிவிக்கப்பட்டது. சென்னைக்கும் இந்தத்தகவல் பறந்தது. இதைத் தொடர்ந்து உதவி கமிஷ்னர் ஹரிஹரனை சஸ்பெண்ட் செய்யுமாறு காவல்துறைதலைமையகம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஹரிஹரன் அதிரடியாக பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக அழகிரி நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவதையொட்டி, மதுரை நீதிமன்ற வளாகத்திற்குள்வக்கீல்களைத் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், இதையும்மீறி உள்ளே நுழைய முயன்ற திமுக வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும்தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

ஜாமீன் மனு தள்ளுபடி:

இந் நிலையில் அழகிரியை ஜாமீனில் விடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது. அழகிரிக்கு ஜாமீன் மறுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

அழகிரி- ஸ்டாலின் சந்திப்பு:

இந் நிலையில் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அழகிரியை திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது அழகிரியின் மனைவி காந்தி, மகன் துரையும் உடனடிருந்தனர்.சிறையில் உள்ள அழகிரியை ஸ்டாலின் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X