புளு பிலிம் டாக்டர் பிரகாஷ் வழக்கில் நர்ஸ் தற்கொலைக்கு முயற்சி
சென்னை:
புளு பிலிம் டாக்டர் பிரகாஷின் ஆபாசப் படங்களில் நிர்வாணமாக, படுக்கையறைக் காட்சிகளில்நடித்துள்ள நர்ஸ் சித்ராவும் அவரது தம்பி மனைவியும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்குமுயன்றுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ், ஆபாச வீடியோ படங்களை எடுத்து அதைதமிழ்செக்ஸ்.காம் மற்றும் பல இன்டர்நெட் தளங்களில் விற்று வந்தார்.
இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஆபாசப் படங்களில் அவரது மருத்துவனையில் பணியாற்றிய நர்ஸ்கள், சில சினிமாதுணை நடிகைகள், டிவி நடிகைகள், கல்லூரி மாணவிகள் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதில் நடித்த நர்ஸ் சித்ரா என்பவர் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அவரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இவரது தம்பி ஸ்டாலின், ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். ஆபாச பட வழக்கு ஒருபுறம், தம்பி கைதாகி சிறையில் சென்றது மறுபுறமாகசேர்ந்து மன வேதனை அடைந்தார் சித்ரா.
இதனால், அவரும் தம்பி ஸ்டாலினின் மனைவி ஆஷாவும் சேர்ந்து தூக்க மாத்திரை சாப்பிட்டனர்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த இவர்களை அண்டை வீட்டினர் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.
தற்போது இந்த இருவர் மீதும் தற்கொலை முயற்சி வழக்கும் போடப்பட்டுள்ளது.
- செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- இன்டர்நெட் "செக்ஸ்" டாக்டர் பிரகாஷின் மருத்துவப் பட்டம் பறிபோகுமா?
- புளுபிலிம் பிரகாஷ் மனைவி விவாகரத்து வழக்கு: ஜூன் மாதம் ஒத்திவைப்பு
- விவாகரத்து கோருகிறார் புளு பிலிம் டாக்டரின் மனைவி
- செக்ஸ் டாக்டர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
- ""குண்டர் சட்டத்தில் "செக்ஸ்" டாக்டர் கைது சரியே"": சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு












Click it and Unblock the Notifications