ஸ்ரீதர் அனந்தகிருஷ்ணனுக்கு கருணாநிதி பாராட்டு
சென்னை:
அண்டார்டிகாவில் உள்ள பனி மலை ஒன்றுக்கு புவியியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஸ்ரீதர் அனந்தகிருஷ்ணனின்பெயர் சூட்டப்பட்டிருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
ஸ்ரீதர் அனந்தகிருஷ்ணன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்அனந்தகிருஷ்ணனின் மகனாவார்.
இதுதொடர்பாக கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், ஸ்ரீதர் அனந்தகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ள பெருமை,ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமையாகவே நினைக்கிறேன். ஸ்ரீதரை நினைக்கும்போது அவரது தந்தை,டாக்டர் அனந்தகிருஷ்ணன்தான் நினைவுக்கு வருகிறார்.
89-90ல் அவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்சேர்க்கையில் ஒற்றை சாளர முறையை (சிங்கிள் விண்டோ) அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
தமிழ் இணைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். அத்தோடு அவரது பதவிக் காலத்தின்போதுசாப்ட்வேர்துறையில் தமிழகம் முன்னணிக்கு வந்தது. திமுக ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்தில் இருந்து ரூ. 1,904கோடி அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி ஆகக் காரணமாக இருந்தார்.
அவரது புதல்வர் ஸ்ரீதர் இப்போது தமிழனின் பெருமையை அண்டார்டிகா பனி மலையில் பொறித்துள்ளார் என்பதுநமக்கெல்லாம் பெருமை தரக் கூடிய விஷயம். ஸ்ரீதருக்கு எனது மனமாக்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.