பாலக்கோடு நீதிபதியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
பாலியல் பலாத்கார புகார் சுமத்தப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நீதிமன்றநீதிபதி ஆர்.பன்னீர் செல்வத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பாலக்கோடு நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்தவர் பன்னீர் செல்வம். இவர் மீது அதே ஊரைச் சேர்ந்த பலபெண்கள் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளனர்.
வீடு புகுந்து தங்களை நீதிபதி கற்பழிக்க முயன்றதாக புகார் சுமத்தப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி, பன்னீர்செல்வத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தலைமறைவாகி விட்ட நீதிபதி பன்னீர் செல்வம் தற்போது முன்ஜாமீன் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சதாசிவம், வழக்கின் முக்கியத்துவம், நடந்த சம்பவத்தின் பின்னணிஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மனுதாரன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படவதாக நீதிபதிதெரிவித்துள்ளார்.