For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச பயிற்சியாளர்கள்: ஜெ. உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி தர முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு விளையாட்டுகளிலும் சிறப்பான நிலையை எட்டியுள்ளவர்களைஅடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இதுவரை 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்று தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்தஜெயலலிகா பல்வேறு உதவிகளை வழங்கினார்.

துப்பாக்கிச் சுடுவதில் மிகச் சிறந்த வீரரான தரிணிக்கு புதிய துப்பாக்கி வாங்க ரூ. 1 லட்சத்தை ஜெயலலிதா இன்றுவழங்கினார்.

அதே போல ஸ்குவாஷ் விளையாட்டில் முன்னணி வீராங்கனையான ஜோஸ்னா சின்னப்பாவுக்கு அமெரிக்காவில்3 வார பயிற்சி தரவும் த்தரவிடடார். இதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் அறிவித்தார்.

படகு சவாரியில் தமிழகத்தின் முன்னணி வீரரான சந்தீபுக்கு புதிய படகு வாங்க ரூ. 80,000த்தை ஜெயலலிதாவழங்கினார்.

ஈட்டி எரிதல் பிரிவில் சிறந்த வீராங்கனையான சரஸ்வதிக்கு நவீன காலணிகள் மற்றும் உடற்பயிற்சிக் கருவிகள்,ஈட்டிகள் வாங்க ரூ. 30,000 வழங்கப்பட்டுள்ளது.

நீச்சல் வீரர் ஜோஸ்வா ஜோசபுக்கு பெங்களூரில் பயிற்சி தருவதற்கும் முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும் இது போன்ற சிறந்த வீரர்களை அடையாளம் காணுமாறும், அவர்களுக்கு அந்தந்தப் பிரிவைச் சேர்ந்தசர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி தருமாறும் அதிகாரிகளுக்கு ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இது தவிர பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த 4 பெண் குழந்தைகளுக்கு தலாரூ. 15,000 வழங்கினார். தர்மபுரியில் முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில்வெடிவிபத்து ஏற்பட்டதில் பலியான தஸ்தகீர் என்ற வாலிபரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் உதவியையும்ஜெயலலிதா வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் ரெளடியால் முகத்தில் திராவகம் வீசப்பட்ட ஜீனாகுமாரி என்ற பெண்ணுக்கு ரூ.50,000த்தை சிகிச்சைக்காக வழங்கினார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X