பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மாடுகளை ஏலம் விட எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மாநகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கணக்கான பசு மாடுகள்,எருமைகள் ஆகியவற்றை ஏலம் விட முயன்ற மாநகராட்சி அதிகாரிகளை மாடு உரிமையாளர்கள் தடுத்துநிறுத்தினர்.
சென்னை மாநகரில் மாடுகள் வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தடையை மீறி, மாடுகளை வளர்த்தவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில்சாலைகளில், தெருக்களில் திரிந்த ஆயிரக்கணக்கான பசுக்கள், எருமைகளை பிடித்து வந்து புதுப்பேட்டைபகுதியில் அடைத்து வைத்தனர்.
இந்த மாடுகள் இன்று ஏலம் விடப்படுவதாக இருந்தது. இதையடுத்து அங்கு திரண்டு வந்த மாடுகளின்உரிமையாளர்கள், மாடுகளை ஏலம் விடக் கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
இதனால் ஏலம் நடைபெறவில்லை. இந்த மாடுகளை நம்பி சென்னையில் 25,000 பேருடைய வாழ்க்கை உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications