For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீயணைப்பு படையில் பெண் அதிகாரிகள் நியமனம்: நாட்டிலேயே முதல்முறை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையம். அடுத்து மகளிர் போலீஸ் பட்டாலியன். பிறகு மகளிர் கமாண்டோபடை, இப்போது மகளிர் தீயணைப்புப் படை அதிகாரிகள். இவ்வாறு மகளிருக்கு முக்கியத்துவம் தருவதில்முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் தொடருகின்றன.

இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்உருவாக்கப்பட்டன.

பின்னர் பெண் காவலர்களை வைத்து தனி படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. சமீபத்தில் பெண் வீராங்கனைகளைக்கொண்ட கமாண்டோ படை உருவானது.

அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு இந்தியாவிலேயே முதல் முறையாக என்ற அடைமொழியுடன்இன்னொரு சாதனையைப் படைத்துள்ளார் ஜெயலலிதா.

தேசிய அளவிலும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையிலும், முதல் முறையாக இரண்டுபெண்களுக்கு அதிகாரிகள் அளவிலான பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

பிரியா என்பவர் நாகப்பட்டனம் மாவட்ட தீயணைப்பு அதிகாரியாகவும், மீனாட்சி விஜயக்குமார் சென்னைதாம்பரத்தில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தின் மாவட்ட தீயணைப்பு அதிகாரியாகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்புப் படையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநில உள்துறையையும் தனது பொறுப்பில் வைத்துள்ளமுதல்வர் ஜெயலலிதா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தீயணைப்பு உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளை களத்தில் இறங்கி செய்ய வேண்டிய பணியை உள்ளடக்கிய இந்தபதவிகளுக்கு இதுவரை எந்தப் பெண்ணும் நியமிக்கப்பட்டதில்லை.

இந்தப் பெருமையைப் பெற்றுள்ள முதல் பெண்மணிகள் இவர்கள்தான். இருவரும் தமிழ்நாடு அரசுப் பணிதேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒரு சில இடங்களில்தான் பெண்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும்அவர்களில் யாரும் அதிகாரிகள் அந்தஸ்தில் இல்லை.

எனவே தீயணைப்புத் துறையிலும் பெண்களை உயர் பதவியில் அமர்த்திய முதல் மாநிலம் என்ற பெருமைதமிழகத்திற்குக் கிடைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X