For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி ஆதரவாளர்களின் காவல் நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மு.க.அழகியின் ஆதரவாளர்கள் 9 பேரின் காவல்ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பி.எம்.மன்னன், எஸ்ஸார் கோபி, கராத்தே சிவா, முபாரக் மந்தி, இப்ராகிம் சுலைமான் சேட், மணி,

சீனிவாசன், ஈஸ்வரன், ஊதல்பாண்டி ஆகியோரின் காவலை ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீட்டித்து 6-வது குற்றவியல்நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.

அல்-உம்மாவினர் காவல் நீட்டிப்பு:

இதற்கிடையே, திருமங்கலத்தில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பியஹைதர் அலி மற்றும் அவருக்கு உதவிய 23 அல்-உம்மா அமைப்பினரின் காவலையும் ஆகஸ்ட் 5ம் தேதி வரைநீட்டித்து மதுரை 2-வது விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இமாம் அலியும், ஹைதர் அலியும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமங்கலம் காவல் நிலையம் அருகே போலீஸ்பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இமாம் அலி பெங்களூரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஹைதர் அலி தப்பியோடிய அடுத்த நாளே பிடிபட்டுவிட்டார்.

ஹைதர் அலி தப்ப உதவி செய்த 23 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களதுகாவலை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X