17 தலித்கள் உயிர்விட்ட மாஞ்சோலை போராட்டத்தின் 4-ம் ஆண்டு நினைவு நாள்
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் நடந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது,போலீசாரின் தாக்குதலால், 17 தலித் இன மக்கள் தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர்விட்டதன் 4-வது ஆண்டுநினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
4 ஆண்டுகளுக்கு ஜூலை 23ம் தேதி, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்நடந்தது. ஊர்வலமாகச் சென்ற தலித் இனத் தொழிலாளர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாகத் தடியடி தாக்குதல்நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஏராளமான தொழிலாளர்கள் அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றில்குதித்தனர். நீச்சல் தெரியாத 17 பேர் பரிதாபமாக ஆற்றில் மூழ்கி உயிர் விட்டனர்.
இந்தச் சம்பவத்தின் 4-ஆண்டு நினைவு தினம் நெல்லையில் நடந்தது. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஊர்வலமாக சம்பவம் நடந்த ஆற்றுப் பகுதிக்குச் சென்று அங்கு மலர்அஞ்சலிசெலுத்தினர்.
பின்னர் அங்கு திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில் அவர் பேசுகையில், இந்த இடத்தில் நினைவிடம் அமைக்கஅரசு அனுமதி அளித்து, உரிய இடத்தை ஒதுக்க வேண்டும் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனும் இந்த இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மாஞ்சோலைப் போராட்டத்தின்போது ஆற்றில் விழுந்து உயிர் விட்டவர்களில் ஒரு தாய் தனது ஒரு வயதுகுழந்தையான விக்னேனுடன் நீரில் மூழ்கினார். அதில் அக் குழந்தையும் பலியானது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications