ஜனனியின் ரூ.1.4 கோடி வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்படுமா?: இன்று தீர்ப்பு
மதுரை:
கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, நடராஜனுக்கு நெருக்கமான, ஜனனியிடம் கைப்பற்றப்பட்டரூ.1.4 கோடியை வருமான வரித் துறையிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கில் மதுரை நீதிமன்றம் இன்றுதீர்ப்பு அளிக்கவுள்ளது.
ஜனனியின் மதுரை, சென்னை நீலாங்கரை பங்களாக்களில் கைப்பற்றப்பட்ட பணம், கார் ஆகியவை மதுரைகருப்பாயூரணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணத்துக்கு உரிய கணக்கு இல்லை என்பதால் அதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிவருமான வரித்துறையினர் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் திங்கள்கிழமை விசாரித்தார். அப்போது கைப்பற்றப்பட்டரூ.1.4 கோடிக்கு வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டியுள்ளதால், அந்தப் பணத்தைவருமான வரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, அந்தத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேலுச்சாமிவாதிட்டார்.
ஆனால், ஜனனி விஷயத்தில் இன்னும் விசாரணையே முடிவடையாததால், பணத்தை வருமான வரித் துறையிடம்ஒப்படைக்கக் கூடாது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் மோகன் கூறினார்.
ஜனனியின் சார்பில் ஆஜரான, நடராஜனின் நெருங்கிய நண்பரான வழக்கறிஞர் சங்கரபாண்டியன் பேசுகையில்.ஜனனியின் வீட்டுச் சாவியை ஒப்படைத்தால்தான் ஆவணங்களைச் சரிபார்த்து வருமான வரிசெலுத்தப்பட்டுள்ளதா, இல்லையா என்ற விவரத்தை நான் தெரிவிக்க முடியும் என்றார்.
இதையடுத்து, பணத்தை வருமான வரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்த தீர்ப்பை இன்று(செவ்வாய்க்கிழமை) அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.












Click it and Unblock the Notifications