For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம்மொழி போராட்டம்: பா.ஜ.க. பங்கேற்பு வாபஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி டெல்லியில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில்கலந்து கொள்ளப் போவதில்லை என்று தமிழக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி தமிழறிஞர்கள் உண்ணாவிரதம்தொடங்குகிறார்கள். இதில் திமுக எம்.பிக்கள் கலந்து கொள்வார்கள் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதிஅறிவித்துள்ளார். இதுதவிர பல்வேறு அமைப்பினரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்போம் என்று தமிழக பா.ஜ.கவும் அறிவித்திருந்தது. இந் நிலையில்உண்ணாவிரதத்தில் தமிழக பா.ஜ.க எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அகில இந்தியபா.ஜ.க. செயலர் இல.கணேசன் திடீரென்று பல்டி அடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உண்ணாவிரத்தில் பங்கேற்பது சரியல்ல என்று கட்சித் தலைவர்வெங்கையா நாயுடு கூறியுள்ளார். எனவே நாங்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க மாட்டோம்.

இதே கோரிக்கை தொடர்பாக விரைவில் பிரதமரைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X