ராகிங் கொடுமை: 11 மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட்?
சென்னை:
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஜூனியர் மாணவர்களை அடித்தும்,உதைத்தும், நிர்வாணப்படுத்தியும் கொடுமைப்படுத்திய 11 மருத்துவக் கல்லூரி மாணவர்கள்சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசினர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள், புதிதாக சேரும்ஜூனியர் மாணவர்களை மிகவும் கொடுமையாக ராகிங் செய்வதாக கல்லூரி நிர்வாகத்திற்குப் புகார்வந்தவண்ணம் இருந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு முதலாமாண்டு மாணவரை, சில சீனியர் மாணவர்கள்தங்களது அறைக்குக் கூட்டிச் சென்று மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளனர். பின்னர் ஆடைகளைஅவிழ்க்கச் செய்து நிர்வாணமாக அனுப்பியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்த மாணவர் அன்றேவிடுதியைக் காலி செய்து விட்டு தனது ஊருக்குச் சென்று விட்டார்.
பின்னர் தனது பெற்றோருடன் வந்து கல்லூரி டீன் சித்தனிடம் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றடீன் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதில் 11 மாணவர்கள் ராகிங் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவர்களை ஒரு ஆண்டுக்கு அதாவது 2 செமஸ்டர்களுக்கு சஸ்பெண்ட்செய்வது என கல்லூரி கவுன்சில் முடிவு செய்தது.
கல்லூரி விடுதியில் இனிமேல் அவர்களை அனுமதிப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து இறுதி முடிவை டீன் சித்தன் எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.