விசாரணை விபரத்தை வெளியிட அரசு ஊழியர்களுக்கு தடை
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் நடக்கும் விசாரணையின்போதுநடப்பவற்றை செய்தியாளர்களிடம் தெரிவிக்க 3 நீதிபதிகளும் தடை விதித்துள்ளனர்.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் 3நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின்போது, பிறந்து 2 மாதமேஆன குழந்தை, மன நிலை பாதிக்கப்பட்ட குழந்தையுடன் சில அரசு ஊழியர்கள் வந்திருந்தனர்.
நீதிபதிகள் அவர்களிடம் கேட்டது குறித்து வெளியில பத்திரிகையாளர்களுக்கு அவர்கள் பின்னர்பேட்டி கொடுத்தனர். தற்போது இதுபோல பேட்டி கொடுப்பதற்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.இதுதொடர்பாக தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவர் பாண்டுரங்கன் கூறுகையில்,விசாரணையின்போது நடப்பவற்றை வெளியில் சொல்லக் கூடாது என விசாரணைக்கு வரும்ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் எங்களிடம் சொல்லும் தகவல்களைபத்திரிககையாளர்களிடம் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையே விசாரணை தொடர்ந்து இன்றும் நடக்கிறது. தலைமைச் செயலக நிதித்துறையைச்சேர்ந்த 170 பேர் இதில் கலந்து கொள்கிறார்கள். இதுவரை 618 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.