53 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பினர்
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனம் மாவட்டத்தில் கடந்த 1990ம் ஆண்டு முதல் தங்கியிருந்த 53 இலங்கை தமிழ்அகதிகள் தங்களது சொந்த ஊான திரிகோண மலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இலஙகையில் இனப் போர் அதிகரித்ததையடுத்து அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குவந்தனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுபோல, நாகையிலும் பல அகதிகள் முகாம்களில் தங்கியுளளனர். இவர்களில் 53 பேர்திரிகோணமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களில் பலர் மீனவர்கள். படகுகளுடன் இவர்கள்பிடிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர்.
படகுகளுடன் அந்த மீனவர்களும் திரிகோணமலை கிளம்பிச் சென்றனர். இவர்களை நாகைமாவட்ட ஆட்சித் தலைவர் வீரசண்முகமணி , உதவி ஆட்சித் தலைவர் உமாநாத் உள்ளட்டஅதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
சர்வதேச கடல் எல்லை வரை இவர்களை அதிகாரிகள் சென்று வழியனுப்பினர். அங்கு இலங்கைகடற்படையினர் வசம் ஒப்படைத்து விட்டு நாகை திரும்பினர்.