மத்திய அமைச்சர் கண்ணப்பன் மீது பொடா வழக்குப் பதிவு?
சென்னை:
மதிமுக தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான மு. கண்ணப்பனை கைது செய்ய வசதியாக அவர் மீதுதமிழக அரசு பொடா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
புலிகளை ஆதரித்து அவர் தெரிவித்த கருத்துக்களை வைத்து இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகசிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அமைச்சராக உள்ள அவரை மத்திய அரசின் அனுமதியில்லாமல் கைது செய்ய முடியாது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் தான் அவரை பதவியை விட்டு விலக்குமாறு கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசுகடிதம் அனுப்பியுள்ளது.
அதே நேரத்தில் கண்ணப்பனின் பேச்சு அடங்கிய ஆடியோ, வீடியோ ஆதரங்களைச் சேகரிக்கும் பணியையும்தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கிடையே புலிகளை ஆதரித்து வரும் மதிமுகவைத் தடை செய்ய வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி கோரியுள்ளார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழக சட்டக் கல்லூரிகளில் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்த தமிழர்களுக்கு தரப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை சமீபத்தில் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இது தவறானது. அவர்களுக்கு மீண்டும் இடம் தர முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக நான் வழக்கும் தொடர்ந்துள்ளேன் என்றார்.