ஜெவை சந்திக்க நேரம் கேட்கிறார் சோ.பா
சென்னை:
கோயம்பேடு வணிக வளாக நிலத்தை தனியாருக்கு விற்றதில் மாநகராட்சி அதிமுக கவுன்சிலரும், நகரவடிவமைப்பு குழு தலைவருமான வெற்றிவேல் ரூ. 25 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளது குறித்து புகார்கொடுக்க நேரம் ஒதுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன்.
இதுதொடர்பாக ஜெயலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோ.பா. கூறியிருப்பதாவது:
கோயம்பேடு வணிக வளாகத்திற்கு அருகே உள்ள 33 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு விற்றதில் முறைகேடுகள்நடந்துள்ளன. இதில் ரூ. 25 கோடி அளவுக்கு முறைகேடுகளை செய்துள்ளார் கவுன்சிலர் வெற்றிவேல்.
இதுதொடர்பாக சமீபத்தில் மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாரை சந்தித்து, காங்கிரஸ் கவுன்சிலர்கள் புகார்கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பாக நேரில் சந்தித்து விளக்கநேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரசில் இருந்து அதிமுகவுக்குத் தாவியவர் வெற்றிவேல் என்பது குறிப்பிடத்தக்கது.