இது ஸ்டாலின் கதை
சிவகங்கை:
சிவகங்கை அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல திமுக தலைவர் கருணாநிதியைகிண்டலடிக்கும் வகையில் 2 கதைகளைக் கூறினார்.
அவர் சொன்ன முதல் கதை முட்டை திருடன் பற்றிய கதையாகும். கதையைக் கேளுங்கள்:
ஒரு சிறுவன், தனது பக்கத்து வீட்டிலிருந்து தினசரி முட்டைகளை திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருநாள் கையும் களவுமாக பிடிபட்டான். அப்போது அந்த சிறுவனின் தந்தை வந்து, இனிமேல் எனது மகன் திருடமாட்டான் என்று கூறி, சிறுவனை மீட்டுச் சென்றார்.
அந்த சிறுவன் மீண்டும் முட்டை திருட செல்வதில்லை. ஆனால், தனது மகனுக்காக அந்த கோழியையே திருடி வந்துதனது வீட்டில் வைத்து விட்டார் தந்தை.
இந்தக் கதை மூலம் தந்தை யார், மகன் யார் என்பதை உங்களுக்கு விளக்கமாக கூற வேண்டியதில்லை என்றுநினைக்கிறேன் என்று கூறி நிறுத்தினார் ஜெயலலிதா.
திமுக மாநாட்டில் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என திமுக முக்கியத் தலைவர்கள் பேசியதையும்,கட்சியையே ஸ்டாலினின் வசம் கருணாநிதி ஒப்படைக்கப் போவதையுமே இவ்வாறு முட்டையுடன் ஒப்பிட்டுப்பேசினார் ஜெயலலிதா.
இங்கே முட்டை என ஜெயலலிதா குறிப்பிட்டது திமுகவை.