For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டம் சேர்க்க சென்ற அரசு பேருந்துகள்: அவதிப்பட்ட மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

சிவகங்கை:

சிவகங்கையில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்காக கூட்டத்தை அழைத்துச் செல்ல,நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகளை அதிகாரிகள் கொண்டு சென்று விட்டதால், சிவகங்கை மற்றும்ராமநாதபுரம் மாவட்டங்களில் பேருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதியுற்றனர்.

சிவகங்கையில் நேற்று அரசு விழா நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு ரூ. 208 கோடிமதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், அரசு நலத்திட்டஉதவிகளைப் பெற இருந்தவர்கள், மற்றும் அதிமுகவினகை விழாவுக்கு அழைத்து வருவதற்காக அரசு பேருந்துகள்ஏற்பாடு செய்யப்பட்டன.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்திலிருந்து இந்த பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானபேருந்துகள் அரசு விழாவுக்காக சென்று விட்டதால் பல பகுதிகளில் பஸ்களே வரவில்லை. இதனால் கடும்வெயிலில் பல பஸ் நிறுத்தங்களில் பொது மக்கள் கூட்டம், கூட்டமாக பஸ்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலைஏற்பட்டது.

கமுதி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகளைய காண முடியவில்லை. இதனால்கிடைத்த தனியார் பேருந்துகளிலும், கூரைகளில் அமர்ந்தும் மக்கள் பயணித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X