தலித் பெண்ணை மலம் உண்ண வைத்த கொடுமை: கலெக்டர் நேரில் விசாரணை
மதுரை:
மதுரை மாவட்டம் கீழ உரப்பனூர் கிராமத்தில் தலித் பெண்ணின் வாயில் மலம் கலந்த நீரை ஊற்றி அதை குடிக்கவைத்து அவமானப்படுத்திய சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் சந்திரமோகன் நேரில் விசாரணை நடத்தினார்.
தப்பி வந்த முத்துமாரி இது தொடர்பாக பஞ்சாயத்தில் புகார் கூற முடிவு செய்திருந்த நிலையில், ராஜுமற்றும் அவரது மனைவி விஜயா உள்ளிட்ட அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்துமுத்துமாரியையும் அவரது கணவர், குழந்தைகளைத் தாக்கினர்.
முத்துமாரியின் வாயில், மலம் கலந்த நீரை ஊற்றி பெரும் கொடுமையைச் செய்தனர். இதனால் வாழ்க்கையேவெறுத்துப் போயுள்ள முத்துமாரி எதையும் உண்ணவே மறுத்து வருகிறார். தற்கொலை செய்து கொள்ளும்சிந்தனையிலும் உள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த முத்துமாரியின் உறவினர், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.முதலில் புகாரை வாங்க மறுத்து முத்துமாரி குடும்பத்தினரையே திட்டிய பேசிய போலீசார் பின்னர் புகாரை வாங்கிக்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தால் நிலை குலைந்து போன முத்துமாரியின் குடும்பம் ஊரை விட்டே வெளியேறியது.போலீசாரிடம் புகாரைத் தந்த பின்னரே தனது சொந்த ஊருக்குத் திரும்பினார் முத்துமாரி.
இந்த விவகாரம் மனித உரிமைக் கமிஷனுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பீப்பிள்ஸ் வாட்ச் என்ற சமூகசேவை நிறுவனமும் இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.
விவகாரம் பெரிதாவதை உணர்ந்த தமிழக அரசு இது குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டருக்குஉத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் கீழ உரப்பனூர் கிராமத்திற்கு சென்று விசாரணைமேற்கொண்டார். அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி (ஆர்.டி.ஓ) அன்பழகனும் சென்றார்.
அவர்களிடம் விஜயா தனது வாயில் மலம் கலந்த நீரை ஊற்றியதை கதறியபடி கூறினார் முத்துமாரி.
இருப்பினும் உயர் ஜாதியைச் சேர்ந்த மற்றவர்கள் தன்னிடம் தவறாக நடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.இந்த விஷயத்தில் அவர் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த ஆர்.டி.ஓவுக்கு ஆட்சித் தலைவர் சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார்.
சக பெண்ணின் வாயில் மலத்தை ஊற்றிய மிருகம் விஜயா தலைமறைவாகி விட்டார். இந்தச் சம்பவத்தால் கீழஉரப்பனூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதையடுத்து அந்த ஊரில் தலித்கள் வசிக்கும் காலனிப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இனி எனக்கு எல்லாமே அரசியல் தான்.. தவெக வேட்பாளர்கள் நேர்காணலில் ஓபனாக பேசிய விஜய் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
விஜய்யை சங்கீதா நெருங்கவிடாமல்! குறுக்கே இருக்கும் அந்த நபர் யார் தெரியுமா? ரஞ்சனா பரபரப்பு தகவல் -
பாஜகவின் வக்கிர அரசியல்.. விஜய் நிகழ்த்த போகும் அதிசயம்.. நாஞ்சில் சம்பத் அப்டேட் -
CBI Summon: விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று விஜய் நேர்காணல்! அப்போ டெல்லிக்கு போகலையா? -
திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் போயிருக்கக் கூடாது! தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கண்டனம் -
முதலில் உங்க வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மரியாதை கொடுங்க.. விஜய்க்கு குட்டு வைத்த பரிதாபங்கள் டீம்! -
விஜய் என் நண்பர்.. திரிஷாவை பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! மிரட்டல் போன்! உடைத்து பேசிய பார்த்திபன் -
விஜயே கூப்பிட்டாலும் நான் வரலன்னு திரிஷா சொல்ல வேண்டாமா? எனக்கு வந்த மிரட்டல் போன்! பார்த்திபன் ஆதங்கம் -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள்












Click it and Unblock the Notifications