ஜனனி மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்
மதுரை:
கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட நடராஜனின் நெருங்கிய தோழி ஜனனி, அவரது தாயார் ரமீஜா மற்றும்கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது போலீசார் மதுரை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவர்களிடம் 30 கிலோ கஞ்சாவும், கணக்கில் வராத ரூ. 1.90 கோடி பணம் இருந்ததாக கூறி அவர்களை மதுரைபோலீஸார் ஜூலை 11ம் தேதி கைது செய்தனர்.
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது நேற்று மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி சம்பத் குமாரின் முன் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையில் 36 சாட்சிகளின் வாக்குமூலம்,கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே சிறையில் தங்களை போலீசார் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தனது வழக்கறிஞர்சங்கரபாண்டியனிடம் ஜனனி அழுதபடியே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications