For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானபங்கம் செய்யப்பட்ட மகளுடன் தந்தை தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

மானபங்கம் செய்யப்பட்ட மகளுடன் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம் அருகே உள்ள வளையவட்டதைச் சேர்ந்தவன் சங்கர் (வயது 25). இவனது குடும்பத்துக்குச்சொந்தமான வயலில் வேலை பார்த்து வந்தவர் ராஜமாணிக்கம் (வயது 45). இவரது மகள் உஷா (வயது 18).

உஷாவும் விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் தனது வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த உஷாவை சங்கர் மானபங்கம் செய்துள்ளான்.

இதை தனது தந்தையிடமும் தாயார் ராஜாத்தியிடமும் சொல்லி அழுதார் உஷா. தான் வேலை பார்க்கும் வயலின்முதலாளி வீட்டுப் பிள்ளையே இந்தக் கேவலத்தைச் செய்துவிட்டதால் மனமுடைந்தார் ராஜமாணிக்கம்.

முதலாளி வீட்டினரை எதிர்க்க முடியாத ராஜமாணிக்கம் குடும்பத்தினர் தவித்துள்ளனர். இந் நிலையில் உஷா விஷம்குடித்துள்ளார். இதைப் பார்த்த ராஜமாணிக்கமும் விஷம் குடித்துள்ளார்.

இருவருமே சிறிது நேரத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து ராஜமாணிக்கத்தின் மனைவி ராஜாத்தி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

உஷா, ராஜமாணிக்கத்தின் தற்கொலை குறித்து அறிந்த சங்கர் தலைமறைவாகிவிட்டான். போலீசார் அவனைத் தேடிவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X