போலீஸ் கெடுபிடி: இரங்கல் கூட்டமான உண்ணாவிரதம்
கொழும்பு:
சென்னையில் போலீஸாரால் வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்த அரசு அனுமதி தர மறுத்துவிட்டதால் இரங்கல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுளளது.
இந்தக் கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சென்னை காமராஜர் அரங்கத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரங்கல் கூட்டம்நடக்கவுள்ளது.
அகில இந்திய நாடார் கூட்டமைப்பு சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரத்தில் இரங்கல் கூட்டம் நடத்தலாம் என போலீசார் கூறினர்.
இதையடுத்து அதை இரங்கல் கூட்டமாக நாடார்கள் சங்கம் மாற்றியுள்ளது. இதற்கு அனுமதி தந்துள்ள சென்னைகாவல்துறை நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லாமல் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அப்படி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதி கொடுக்கப்பட்டுள்ள பிரிவினர் தவிர வேறு யாராவது கூட்டம் நடத்த முயன்றாலோ அல்லதுபிரச்சினையை எழுப்ப முயன்றாலோ அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காமராஜர் நினைவு அரங்கத்தில் மட்டுமே கூட்டம் நடத்தப்படும் என்று கூட்ட அமைப்பாளர்கள் உறுதிகூறியுள்ளனர். அதன்படியே கூட்டம் நடத்தப்பட வேண்டும். வேறு ஏதாவது கூட்டம் நடத்த முயன்றால் அனுமதிரத்து செய்யப்படும். கூட்டத்தில் 1,500 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது தாயார்வழக்குத் தொடர இருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications