For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புது தலைமைச் செயலகம்: 28ம் தேதி பூமி பூஜை?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ள இடத்தில் மரம், செடிகளைஅகற்றி சமப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. 28ம் தேதி இங்கு பூமி பூஜை நடத்தப்படும் என்று தெரிகிறது.

கிண்டி- கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தமிழக தலைமைச் செயலகம்கட்டப்படவுள்ளது. இந்ததக் கட்டடத்தை வடிவமைத்து கட்டும் பணி சென்னையைச் சேர்ந்த நாராயண ராவ்அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ள இடத்தை சமப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.புல்டோசர் மூலம், மரம், செடிகளை அகற்றி, தரையை சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே வாஸ்து சாஸ்திர ஜோதிடர்கள் வழங்கிய ஆலோசனைப்படி வரும் 28ம் தேதி, செவ்வாய்க்கிழமை,இங்கு பூமி பூஜை நடத்தப்படும் என்று தெரிகிறது.

20 மாதங்களுக்குள் இந்தக் கட்டடத்தை கட்டி முடிக்கப்பட்டு 2006 பொங்கலன்று புதிய தலைமைச் செயலகத்தைத்திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகம் 5 தளங்களைக் கொண்டதாக இருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X