ஜெயலலிதாவின் பேச்சு தமிழக அரசியலுக்கே களங்கம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரிப் பிரச்சனையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் மீது ஜெயலலிதா புகார்கூறுவது புதிதல்ல, எப்போதும் வழக்கமாக பாடும் பல்லவிதான் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாகப்பட்டனத்தில் நடந்த அரசு விழாவில் தொகுதிஎம்.பியை மேடையில் வைத்துக் கொண்டு அவரை சவாலுக்கு இழுத்து ஜெயலலிதா பேசியிருப்பது தமிழகஅரசியலுக்கு ஏற்பட்ட களங்கம்.

அத்தோடு நில்லாமல், அவரது காரை காரைக்கால் வரை துரத்திச் சென்று தாக்கியதும், மிகக் கடுமையானகண்டனத்துக்குரியது.

காவிரி நீர்ப் பிரச்சினையில் மத்திய அரசில் உள்ள திமுக அமைச்சர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று ஜெயலலிதாகூறியிருப்பது புதிய புகாரல்ல, வழக்கமாக அவர் பாடும் பல்லவிதான்.

இவர் (ஜெயலலிதா) ஆட்சியில் இருப்பாராம், எதிர்க் கட்சிகள் போய் கர்நாடகத்திடம் தண்ணீர் வாங்கிக் கொண்டுவந்து தர வேண்டுமாம். ஜெயலலிதாவுக்கு இது போன்ற பேச்சு புதிதல்ல. அவரைத் திருத்தவும் முடியாது என்றார்.

அரசு விழாக்களுக்கு திமுக எம்.எல்.ஏ, எம்.பிக்களை தமிழக அரசு அழைப்பதில்லையே என்று ஒரு நிருபர்கேட்டபோது, அது தான் நாகப்பட்டிணத்தில் எதிர்க் கட்சி எம்.பியான மணிசங்கர அய்யரை அழைத்துகவனித்தார்களே. அது போதாதா?. யாரையாவது இவர்கள் கூப்பிட்டால் ஆபத்து என்று அர்த்தம் என்றார்கருணாநிதி.

இதற்கிடையே அய்யர் மீதான தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுவும்கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டியது அரசின் கடமை என்று அவர்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+