பண்ணையாரின் எண்கெளன்டர் சாவு: 1 கோடி தந்தி இயக்கம் நடத்த நாடார்கள் முடிவு
சென்னை:
வெங்கடேச பண்ணையார் சாவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மத்திய அரசுக்கு ஒரு கோடி தந்திகள்அனுப்புவது என நடந்த நாடார்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பண்ணையார் சாவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று சென்னையில் கூட்டம் நிடந்தது. சென்னை வாழ் நெல்லை,தூத்துக்குடி நாடார்கள் அமைப்பு இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கூட்டத்தில் திமுக ன்னாள் அமைச்சர்கள் ஆலடி அருணா, சற்குண பாண்டியன், காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன், அகில இந்திய செயலாளர் ஜி.கே.வாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசியவர்கள், பண்ணையார் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் அவரை போலீஸார்சுட்டுக் கொன்றது சட்ட விரோதமான செயலாகும். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு நாடார் சமுதாயத்தினர் ஒரு கோடி தந்திகளை அனுப்புவர்என்றனர்.
கூட்டம் நடந்த தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர்.
ராமதாஸ் கோரிக்கை
இதற்கிடையே வெங்கடேச பண்ணையார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைநடத்த உத்தரவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பண்ணையார் மீது புகார் கொடுத்த சமீர் என்பவர் தற்போது இந்தியாவிலேயே இல்லை என்று கூறப்படுகிறது.எனவே இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதில் தவறே இல்லை என்றார்.