பாலியல் வன்முறை: மருமகளிடம் சமாதானம் பேச மறுத்த துணைவேந்தருக்கு நீதிமன்றம் கண்டனம்
சென்னை:
நீதிமன்றம் கூறியபடி, மருமகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்ததாதற்கு பெரியார் பல்கலைக்கழகதுணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீதுஅவரது மருமகள் சங்கீதா புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து குடும்பத்தோடு முன் ஜாமீன் கோரி சேதுபதிராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அந்த மனுவை நீதிபதி கற்பக விநாயகம் விசாரித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தவிசாரணையின்போது, துணைவேந்தரையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக சாடிய நீதிபதி, 2நாட்களுக்குள் சங்கீதாவை சமாதானம் செய்யுமாறு பணித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது பல முறை முயன்றும் சங்கீதாவுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று சேதுபதி ராமலிங்கம் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி கற்பகவிநாயகம் கடும்கோபமடைந்தார்.
நல்ல மனதுடன் முயன்றிருந்தால் நிச்சயம் சங்கீதாவுடன் பேசியிருக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டுள்ள உங்களதுமகன் அமெக்காவில் இருந்தபடி இந்த வழக்கை கையாளுகிறார்.
இதிலிருந்தே சங்கீதா மீது உங்கள் குடும்பத்திற்கு எந்தவித அக்கறையும் இல்லை என்று தெரியவருகிறது.சங்கீதாவின் திருமண வாழ்க்கையில், நீதிமன்றம் மிகுந்த அக்கறை காட்டுகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட சேதுபதிராமலிங்கத்தின் வழக்கறிஞர் இந்த மனுவை ஓபன் கோர்ட்டில் விசாரிக்காமல்ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிற்பகலில் தனது அறையில் விசாரணை தொடரும் என்றார்.-












Click it and Unblock the Notifications